Enter the month of May. Ramya and me were in a cab and she pulled out an interesting read from her TMDB (தமிழ் மூவிஸ் data base) . She said
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'அவன் தான் மனிதன்' படத்திற்குப் பாடல் எழுத கவிஞர் கண்ணதாசனை ஒப்பந்தம் செய்தனர். விளையாட்டுப் புத்தியுள்ள கண்ணதாசன் பாடல் எழுதுவதில் தாமதம் செய்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிய தயாரிப்பாளர்கள் அவரைக் காணும்போதெல்லாம் மே (1973 ல்) மாதம் சிங்கப்பூரில் படப்பிடிப்பு இருப்பதை நினைவூட்டியவாறே இருந்தனர். இது கண்ணதாசனுக்கு சற்றே எரிச்சலூட்டினாலும் மறுத்து ஏதும் சொல்லாமலிருந்தார். ஒரு வழியாக பாடல்களை எழுதியும் கொடுத்தார். தயாரிப்பாளர்களிடமும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் ஒரு பாடலில் தனிக்கவனம் கொள்ளுமாறு கூறி விட்டுச் சென்றார். "ஆட்டுவித்தால் யார் ஒருவன்...", "மனிதன் நினைப்பதுண்டு...", "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது...", "அன்பு நடமாடும் கலைக்கூடமே..." இவற்றுள் கவிஞர் எதை, ஏன் குறிப்பிட்டார் என்று அனைவரும் தலையைப் பிய்த்துக்கொள்ள, எம்.எஸ்.வி. காரணத்தைக் கண்டுபிடித்தார். அந்தப்பாடல் "அன்பு நடமாடும் கலைக்கூடமே..." விஷயம் என்னவென்றால், அந்தப்பாடலின் ஒவ்வொரு வரியும் 'மே' என்று முடியுமாறு எழுதியிருந்தார் கவிஞர் Ok barring one line ....
அன்பு நடமாடும் கலைக்கூடமே...
ஆசை மழை மேகமே...
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே...
கன்னித் தமிழ் மன்றமே...
மாதவி கொடிப் பூவின் இதழோரமே...
மயக்கும் மதுச்சாரமே...
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே...
மன்னர் குலத் தங்கமே...
பச்சை மலைத் தோட்ட மணியாரமே...
பாடும் புது ராகமே...
வெள்ளலைக் கடலாடும் பொன்னாரமே...
விளக்கின் ஒளி வெள்ளமே...
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் தவமே...
எங்கள் குல மன்னனே...
இன்று கவிபாடும் என் செல்வமே...
என்றும் என் தெய்வமே...
மாநிலம் எல்லாமும் நம் இல்லமே...
மக்கள் நம் சொந்தமே...
காணும் நிலம் எங்கும் தமிழ் பாடும் மனமே...
உலகம் நமதாகுமே...
அன்றுக் கவி வேந்தன் சொல்வண்ணமே...
யாவும் உறவாகுமே...
Interesting it was ... கவிஞர் குசும்பு
2 comments:
ஸ்வாரஸ்யமான தகவல்....கலக்குற மச்சி.....தொடர்ந்து எழுத முயற்சி செய்யவும்..
வாழ்த்துக்கள்.....
while i was travelling by cab in dubai with my wife...shivaji ganesan's movie avan thaan manidan... blah blah.. kannadasan's song.. blah blah...1973..interesting it was
Post a Comment